வானெழுந்து ஒளியேற்று !

வியாழன், 12 நவம்பர், 2009


வானெழுந்து ஒளியேற்று !

வருடம் ஒன்றாய் உனதொளி
வாசல் வந்து போகிறது.

நெருடல் ஏதும் இல்லாமல் - தேகம்
நெருப்பாய் நின்று எரிகிறது.

ஒரு நாளில் உன்நினைவும்
இனிவின்றி கழிகிறது - ஏதும்

தருவாய் என்று நினைத்திருந்தோம்
இன்னலை யெல்லவா தந்து போகிறாய்.

ஒரு வார்த்தையேனும் பேசுவாய் என்றால்
மௌனத்துடனேயே திரும்புகிறாய்.

இம்முறை ஏது கொணர்ந்தாய் எமக்கு?

காரிருள் விலக்கி – எங்கள்
காரியம் நிறைவேற,

இங்கு நீ தங்கிவிடு.

தமிழர் தேசமெங்கும் - இன்பம்
பொங்கிப் பிரவாகிக்க

தீப ஒளியே !
வானெழுந்து ஒளியேற்று!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக