பறவையொன்று

வியாழன், 12 நவம்பர், 2009

பறவையொன்றுகொலை செய்யப்பட்டிருக்கிறதுமுகம் சிதைக்கப்பட்டுஇறக்கைகள் கிழிக்கப்பட்டுகால்கள் உடைக்கப்பட்டுகுருதி சிந்திய நிலையில்கொலைசெய்யப் பட்டிருக்கிறது.பட்டப்பகலில் இனந்தெரியாதவர்களால் நிகழ்த்தப்பட்டதாக சொல்கிறார்கள் வன்முறையின் அதிகபட்ச வெறியை காரணமின்றிஅந்த உயிரின்மீது இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.துப்பாக்கிகளுக்கு கரம்கூப்பிஇறந்துபோன உறவுக்காகபறவைகள் மௌனமாய்...

விழிகள் வீர வரலாறு எழுதட்டும்.

வியாழன், 12 நவம்பர், 2009

விழிகள் வீர வரலாறு எழுதட்டும்.பேசமறந்த பொருளல்ல நீதேச வரைபடத்தில்வீர விழுதெறிந்து நிற்கும்தல விருட்சம்.செங்குருதியின் நிறமெடுத்துவரலாறு எழுதிய போர்க்கால சித்திரமாய்நீயிருக்க…..வர்க்க வேறுபாடுகளும்சமுதாய சம்பிரதாயங்களும்முள்ளாய் உந்தன்முலைகளை கிழித்தெறிய - நீசீரழிந்து போவதேன் ?நிலவும் , மலரும், பதுமையும்உனக்கென உவமையாய்க்; கூறும்ஆசை மொழியல்ல.அடுப்படியும் மந்திரக்...

சொல்லாயோ வாய் திறந்து

வியாழன், 12 நவம்பர், 2009

சொல்லாயோ வாய் திறந்துஇனியவளே !நீ பிரகாசமானவள்ஆதலால் நீஎன்னோடு இருப்பாய் எனகனவு கண்டேன் - இப்போதுஎல்லாமே கானல் நீராக…..அப்போதெல்லாம்,கட்டி அணைக்கையிலேகாதுக்குள் மெல்லக்கதை பேசுவாயேமுத்தங்கள் பொழிய நினைத்தால்முத்தத்தால் எனை நனைப்பாயேஇப்போது எங்கே எனைவிட்டுப் பிரிந்தாய் ?என்மார்பில் எகிறிக் குதித்துகைகளால் தடவி தனத்தில்முகம் புதைத்து சிணுங்குவாயேதட்டினால், வெட்கம்...

பூமி செத்துவிடப் போகிறது…..

வியாழன், 12 நவம்பர், 2009

பூமி செத்துவிடப் போகிறது…..மனிதனை விட்டுவிட்டுபூமி செத்துவிடப் போகிறதுமனித வாழ்க்கையின்இறுதி நகர்வுகளை - இறைவன்கடைசி நிகழ்காலத்தின் நிமிடங்களிலேயேகையளிக்கிறான்மனிதனோ திக்குமுக்காடிஇன்னும் கொஞ்ச நாள்தாவென்று கெஞ்சுகிறான்துப்பாக்கியால்இருளுக்கு வெளிச்சம் போட பலர்.சூரியனோ சீக்கிரத்தில்மறைந்து போக துடிக்கிறான்இன்னொரு கிரகத்தை நோக்கிநகருங்கள் என்று விஞ்ஞானம்வழிகாட்டுகிறது...

உயிர் எரிந்து ஓலமிடும் குரல்…….

வியாழன், 12 நவம்பர், 2009

உயிர் எரிந்து ஓலமிடும் குரல்……. ஆழிப்பேரலையே…………!அடங்கி நீ போய்விட்டாய்அலையாய் நீ கொண்டுவந்த துன்பம்மலையாய் மனதை இடித்து நிற்கிறது…நீள் அலைகொண்டு நீமொட்டுகளை உருக்குலைத்துப் போட்டாய்பூக்களை கசக்கிப் பிழிந்தாய்வேர்களைஅடியோடு பிடுங்கியெறிந்தாய்காற்று வாக்கில்பிணங்களை வீசினாய்……..யுத்தம் சப்பிய நடைபிணங்களாய் நாமிருக்கமீண்டும் எங்கள் முற்றத்தில்இழவு...

மகவொன்றின் பிறப்பில்……..

வியாழன், 12 நவம்பர், 2009

மகவொன்றின் பிறப்பில்……..சாம்பல் பூத்த மேட்டில்விடிவெள்ளியின் பார்வைபூத்திருக்கிறதுஇரவிலும் பகலிலுமாக. ஒரு சூரியனாய்ஒளிகொள்ளப் போதாவிட்டாலும்விரும்பி ஒளிசிந்தி நிற்கிறது.மெழுகுவர்த்திகளின் ஆத்மாக்கள்ஆயிரம் சூரியனாய் - இந்ததேசத்தில் உதிக்கப்போகிறதுஇனவாத இருட்டின் திரைகளைசுட்டெரிப்பதற்காக.பறவைகளெல்லாம் தம்மை அழகுபடுத்தி - இப்போதுபூபாளமாய் புன்னகைக் குரலிடுகிறது.மேகங்களெல்லாம்...

வானெழுந்து ஒளியேற்று !

வியாழன், 12 நவம்பர், 2009

வானெழுந்து ஒளியேற்று !வருடம் ஒன்றாய் உனதொளி வாசல் வந்து போகிறது.நெருடல் ஏதும் இல்லாமல் - தேகம்நெருப்பாய் நின்று எரிகிறது.ஒரு நாளில் உன்நினைவும்இனிவின்றி கழிகிறது - ஏதும்தருவாய் என்று நினைத்திருந்தோம்இன்னலை யெல்லவா தந்து போகிறாய்.ஒரு வார்த்தையேனும் பேசுவாய் என்றால்மௌனத்துடனேயே திரும்புகிறாய்.இம்முறை ஏது கொணர்ந்தாய் எமக்கு?காரிருள் விலக்கி – எங்கள்காரியம் நிறைவேற,...

வலியோடு வா

வியாழன், 12 நவம்பர், 2009

வலியோடு வாதூரம் அதிகமில்லைகூப்பிடு தூரம் வரையில் தான்இலக்கு.நெஞ்சிலே வலி……..எட்டி நடக்கும் பாதங்களிலும் வலி………….கண்களிலே தூக்கம்…….கைகளிலே சோர்வு…………………இன்னும் சொற்ப தூரம் தான்வலியோடு விரைந்து வா…..!தாயின் கருப்பையின் வலிமழலையின் பிறப்புக்குத்தான்வித்தின் வெடிப்புநாற்றின் வளர்ச்சிக்குத்தான்ஏழiயின் உழைப்பிலே வலிஒரு வேளை கஞ்சிக்குத்தான்குயிலின் குரலில் வலிவிடியலின்...

ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன்

வியாழன், 12 நவம்பர், 2009

(நாய்களால் துரத்தப்பட்டு காணாமல் போன எனது செல்லப்பூனையை பிரிந்த வேதனையில் எழுதிய கவிதை)ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன் உனை நான்கொடிய பாவத்தில் இருந்துமீட்டுச் செல்வேன்ஒரு கர்த்தராக இல்லாமல்காதலனாக………. நண்பனாக……….வாயில் திண்ணையில் பசித்த வேட்டை நாய்போலவீணீர் வடித்துக்கொண்டிருக்கும் நாய்களுக்குஒன்றா இரண்டோ துண்டு இறைச்சிகளைவீசிவிட்டு உன்னை அழைத்துச் செல்வேன்என்னுயிரை...

சித்திரையே சிங்காரி

வியாழன், 12 நவம்பர், 2009

சித்திரையே சிங்காரி – சின்னச் சிரிப்புடனே அள்ளும்மன மகமாரிஇத்தரையில் மாந்தர்கள் துயரால் செத்த கதை தெரியலையோபுத்திக்காரியென புழகாங்கித மடைந்தோம் புத்தனுக்கும் சொந்தக்காரி யென்றறிந்தோம்சத்தியமாய் சொல்கிறோம் சகவாசம் உன்னுடன் வேண்டாம் !சித்திரையில் நீ வருவதால் - எங்கள் சீற்றம் குறைய சமாதானம் கொண்டுவா?பத்தரை மாதத் தங்கமே - இல்லையென்றால் ஈழத் தமிழனோடு இனிதுற - இல்அறத்தில்...